முதல் முதலாக பிறந்தநாள் கொண்டாடிய குட்டிக் சிறுவன்… ஊதுபத்தியை ஊத சென்றபோது நடந்த சுவாரஸ்யமான சம்பவம்…

குட்டிக்குழந்தைகள் இருக்கும் வீட்டில் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. அவர்கள் செய்யும் குறும்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தாலே நமக்கும் நன்கு நேரம் போய்விடும். அதனால் சின்னக்குழந்தைகள் இருக்கும் வீடு எப்போதுமே குதூகலமாக இருக்கும்.

அதிலும் தங்கள் குழந்தையின் முதலாவது பிறந்தநாளுக்காக பெற்றோர்கள் காத்திருப்பார்கள். அவர்களுக்கு புதிதாக ஆடை எடுத்து கொடுத்து, வீடு முழுவதும் கலர்புல்லாக அலங்கரிப்பது, பலூன்கள் வாங்கி கட்டி விடுவது என அமர்க்களப்படுத்துவார்கள். இத்தனைக்கும் ஊடே கேக் இல்லாமலா? இங்கேயும் அப்படித்தான். ஒரு குட்டிக்குழந்தையின் ஒரு வயது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது கேக்கிற்கு நடுவே இருந்த மெழுகுவர்த்தியை குழந்தையிடம் ஊதச் சொன்னார்கள்

ஆனால் குட்டிக்குழந்தைக்கு அதைப்பற்றி தெரியாது என்பதால் ஊதுவதற்குப் பதிலாக நெருப்பில் போய் வாய் வைத்துவிட்டது. பிறந்தநாள் அதுவாக குழந்தையின் வாயில் இதனால் சூடுபட்டுவிட்டது. இந்தக் காட்சி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

You may have missed