இப்படியொரு வித்தியாசமான நேர்த்திக்கடன் செய்து பார்த்திருக்கவே மாட்டீங்க… யாருப்பா இந்த சாமியாரு.. புதுசா இருக்காரே..!

ஆன்மிகம் என்பது அற்புதமான அனுபவம். அது அதை உணர்ந்தோருக்கு மட்டுமே தெரியும். சிலர் கடவுளிடம் வேண்டிக்கொண்டு ஏதாவது நேர்த்திக்கடன் செய்வார்கள். இதற்காக சாப்பிடாமல் இருப்பது தொடங்கி, பாத யாத்திரை வரை நாம் பல நேர்த்திக்கடன்களைப் பார்த்திருப்போம்.

ஆனால் அதையெல்லாம் விட ஒரு புதிய வகை நேர்த்திக்கடன் இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. இந்தக் காட்சியை இணையத்தில் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். பரத் சுவாமி என்பவர் தான் இந்த பரிகாரத்தையும், நேர்த்திக்கடனையும் செய்துள்ளார்.

இதில் பத்துக்கும் அதிகமான பெண்களும், சிறுமிகளும் ஒன்றன் பின் ஒருவராகத் தரையில் வரிசையாக அமர்ந்துள்ளனர். அவர்கள் தங்களது இருகைகளையும் அகலமாக நீட்டி விரித்துள்ளனர். இதில் ஒவ்வொரு கையிலும் தேங்காய் வைக்கப்பட்டுள்ளது. பரத் சுவாமி, அங்கும், இங்கும் நடந்தபடி சிவகோத்திரங்களை மூச்சு விடாமல் சொல்லிக்கொண்டே இருந்தார். ஒருகட்டத்தில் அவர் வரிசையில் இருந்த பெண்கள், சிறுமியின் இருகைகளிலும் நீட்டி வைத்திருந்த தேங்காயை தன் கையில் வைத்திருந்த குச்சியால் அடித்து உடைத்தார். இப்படியொரு நேர்த்திக்கடனை இதுவரை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள். இதோ அந்தக் காட்சி உங்களுக்காக…

You may have missed