மகன்களுக்கு செய்ய தவறியதை பேரன் பேத்திகளுக்கு செய்து சந்தோசப்படும் தாதாக்கள்… இந்த தாத்தாவின் பாசத்தை பாருங்க…

குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டிகள் என்றால் கொள்ளை பிரியம். பெற்றோர்கள் பாசமழை பொழிந்தாலும் தாத்தா…பாட்டிகள் காட்டும் அன்பும், அக்கறையும் தனித்து வெளிப்படும். இந்த தாத்தா பாட்டிகள் தான் அவர்களின் பெற்றோருக்கு அம்மா…அப்பா…பேரக் குழந்தைளிடம் காட்டும் அன்பை தன் குழந்தைகளிடம் கண்டிப்போடு வெளிப்படுத்திருப்பார்கள்.

குழந்தைகள் கேட்டதை வாங்கி கொடுக்க மறுக்கும் அல்லது காலம் தாழ்த்தி பூர்த்தி செய்யும் பெற்றோர்கள் பேர குழந்தைகள் எது கேட்டாலும் உடனே நிறைவேற்றி விடுவார்கள். தனது குழந்தைகளிடம் கண்டிப்புடன் …..சதா குறை கூறி அது செய்தால் தப்பு…இது செய்தால் தப்பு என்று குற்றம் குறை கூறி வளர்க்கும் பிள்ளைகளின் பேர குழந்தைகளிடம் அவ்வாறு நடந்து கொள்வது கிடையாது. அவர்கள் எது செய்தாலும் ரசித்து பெருமை பேசுவார்கள். அதிக அன்பை பொழிந்து கதைகள் கூறி அவர்களுக்கு உணவு ஊட்டுவார்கள். தன் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்க தயங்கிய பெற்றோர் பேரக்குழந்தைகள் எது கேட்டாலும் உடனே வாங்கி கொடுப்பார்கள்.

இந்த காணொலியில் ஒரு தாத்தா தன் பேத்திக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து சைக்கிளில் அழைத்து செல்லும் காணொலி சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. சைக்கிள் கேரியரில் உட்காரும் குழந்தைக்கு உடல் வலிக்க கூடாது என்பதற்காக பின்னால் துணியால் குஷன் போன்று வடிவமைத்திருக்கிறார். அந்த காணொலியை இங்கே காணலாம்….

You may have missed