பாட்டியின் ஆசையை நிறைவேற்றி அழகு பார்த்த கிராமத்து இளைஞர்கள்.. வைரலாகும் காணொளி…

பாட்டிக்கள் எப்போதுமே நம் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். பாட்டிக்களோடு நாம் இருந்த பொழுதுகள் மிகவும் மகிழ்ச்சியானவை. அந்தவகையில் எல்லாருக்குமே பாட்டிகளைப் பிடிக்கும். இங்கேயும் அப்படித்தான் ஒரு இளைஞருக்கு அவரது பாட்டியை ரொம்பப் பிடிக்கும்.

அதேபோல் முன்பெல்லாம் நாம் சின்ன வயதில் ஆசைப்பட்ட விசயங்களை பாட்டியிடம் தான் வாங்கிக் கேட்போம். பாட்டிக்களும் அய்யோ என் பேரப்பிள்ளை ஆசைப்பட்டுவிட்டான் என வாங்கிக் கொடுப்பார்கள். இங்கே அதே போல் தன் பாட்டி செல்லமாக வளர்த்த ஒரு இளைஞர்.தன் வயதொத்த சக நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். பாட்டியை பார்த்ததும் ஆத்தா கிரிக்கெட் விளையாடுறியா என கேட்டார் அந்த இளைஞர். பாட்டியும் விளையாட்டாக ஓகே சொல்லிவிட்டார்.

உடனே பாட்டி கையில் பேட்டைக் கொடுக்க பாட்டி கிரிக்கெட் மட்டையால் பந்தை பார்த்து சுழற்றினார். பாட்டிக்கு ஒரு பாலை கூட அட்டண்ட் செய்யத் தெரியவில்லை. ஆனாலும் அந்த வாலிபர் பாட்டிக்காக ரொம்பவே மெதுவாக பந்தை போட்டுக்கொண்டே இருந்தார். இந்த பதிவு இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்கள்.

You may have missed