தன் ஜோடியை தூக்கி சென்ற கசாப்புக்கடைக்காரர்… ஹீரோ போல் வந்து காப்பாற்றிய சேவல்.. வெற லெவல் சம்பவம்…

பாசம் என்பது மிக அற்புதமான உணர்வு. சொந்த குடும்பங்களுக்குள் பாசம் வைப்பது ஒருவகை என்றால் காரணமே இன்றி நமக்கு சக மனிதர்களின் மீதோ, இன்னொரு உயிரினத்தின் மீதே பாசம் வரும். அது மிகச்சிறந்த மனிதநேயப் பண்பும்கூட! மனிதர்களே பார்த்து ஆச்சர்யப்படும் அளவுக்கு ஒரு சேவல் பாசம் மற்றும் மனித நேயத்தோடு செய்த செயல் வைரலாகி வருகிறது. அப்படி என்ன செய்தது எனக் கேட்கிறீர்களா?

பொதுவாகவே நாமெல்லாம் வாழ்க்கைத்துணையின் மீது மனிதர்களுக்குத்தான் பாசம் இருப்பதாக நினைத்துக் கொள்கிறோம். ஆனால் தன் ஜீவனின் மீது மனிதர்களைப் போலவே ஏனைய உயிரினங்களுக்கும் பாசம் உண்டு. அந்தவகையில் இங்கேயும் அப்படித்தான். ஒரு கசாப்பு கடையில் ஒரு கோழியைப் பிடித்து வெட்ட முயல்கிறார். இடைப் பார்த்ததும் அதன் ஜோடி சேவல் ரொம்பவே டென்ஷன் ஆகிவிட்டது. அது கூடியவரை அந்த கோழியை விடச் சொல்லிப் போராடியது.

கோழியை வெட்ட விடாமல் தடுக்கவும் செய்தது. ஒருகட்டத்தில் செம கெத்தாக கோழியை வெட்டும் அரிவாளின் மீது ஏறிக்கொண்டு நகராமல் தர்ணாவும் செய்தது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்கள். இதைப் பார்த்த நெட்டிசன்கள் கோபக்கார கோழியா இருக்குமோ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

You may have missed