குறத்தி வேடத்தில் பட்டையைக் கிளப்பி ஆட்டம் போட்ட குட்டிதேவதை.. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி..!

இந்த உலகில் விலை மதிக்கவே முடியாதது குழந்தையின் புன்னகை தான். குழந்தைகள் எது செய்தாலும் அழகுதான். குழந்தைகளின் உலகமே மிகவும் சுவாரஸ்யம் ஆனது, குழந்தைகள் செய்யும் குறும்புத்தனங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தாலே நேரம் போய்விடும். அதனால் தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலை சொல்லை கேட்காதவர்கள் எனத் தொன்றுதொட்டு சொல்லப்படுகிறது.

குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும். ‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும்.

குழந்தைகளின் செய்கைகளைப் பார்த்தாலே நமக்கு நேரம் போவதும் தெரியாது. எந்த கஷ்டமான சூழலில் நாம் இருந்தாலும் குழந்தைகளோடு இருந்தால் அந்த வலி பஞ்சாகப் பறந்து போகும். இங்கேயும் ஒரு குழந்தை தன் பள்ளிக்கூட விழாவில் குறத்தி வேஷத்தில் குறத்தி பாடலுக்கு பட்டையைக் கிளப்புகிறார். குறத்தில் வேடத்தில் அந்த குழந்தை ஆடும் ஆட்டம் செம ரசனையாக உள்ளது. அதைப் பார்த்த நெட்டிசன்கள் குழந்தை செம அழகாக ஆடுவதாகக் கமெண்ட் செய்துவருகின்றனர். இதோ நீங்களே அந்தக் குழந்தையின் நடனத்தைப் பாருங்களேன்.

You may have missed