இந்த தாத்தா தான் ரியல் பாகுபலி… முதியவரின் ஆணைக்கு கட்டுப்பட்டு தும்பிக்கையால் இந்த யானை எப்படி தூக்குது பாருங்க..!

பாகுபலி சினிமாக் காட்சியை மிஞ்சுவது போல் ஒரு தாத்தா தான் பாகனாக இருக்கும் யானையின் மேல் கம்பீரமாக ஏறும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

மனிதர்களை விட மென்மையும், பாசமும் கொண்டவை மிருகங்கள். அதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

பொதுவாகவே மிருகங்கள் மூர்க்க குணம் கொண்டவை என்றே நாம் சொல்லி வழக்கப்பட்டு உள்ளோம். ஆனால் அவைகளை நாம் தொந்தரவு செய்யாதவரை, அவை நம்மிடம் அன்பு மழை பொழியக் கூடியவை தான். தமிழில் பிரபல திரைப்பட இயக்குநர் ராமநாராயணனின் பல படங்களிலும் யானை, நாய், குரங்கு, ஏன் பாம்பு கூட குழந்தைகளுக்கு உதவுவது போல் காட்சிகள் வரும்.

ஹாலிவுட்டிலும் ஒரு பெண்ணின் மீது கிங்காங் பாசம் காட்டுவதும், ஜங்கிள்புக் சீரியலில் குழந்தை காட்டுக்குள் வளர்வதையும், மிருகங்கள் அதனுடன் நேசம் காட்டுவதையும் நாம் பார்த்திருப்போம். அதிலும் மதம் பிடித்துவிட்டால் கோபம் கொக்கரிக்கும் யானைகள் நிஜத்தில் அவ்வளவு சாந்த சொரூபமானவை. அதிலும் தன் பாகன்களிடம் மிகவும் நெருங்கிய உறவில் இருக்கும்.

இங்கேயும் அப்படித்தான் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஒரு வயதான யானை பாகன், தனது யானையிடம் மிகவும் நெருக்கமாக இருப்பார். அந்த யானையிடம் அவர் மிகவும் பாசமாக இருப்பார். அந்த யானையின் மேல் அவர் செம ஸ்டைலாக பாகுபலி கெட்டப்பில் ஏறும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் அடடே பாகுபலி போல் கம்பீரமாக இருக்காரே என கமெண்ட் செய்துவருகின்றனர்.

You may have missed