வேட்டியை மடிச்சு கட்டி என்னா கெத்தாக ஆடுறான் பாருங்க இந்த சிறுவன்..

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும். ‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும்.

இங்கே ஒரு குழந்தை செய்த செயல் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. அப்படி அந்த பொடியன் என்ன செய்தான் எனக் கேட்கிறீர்களா? பொதுவாகவே நம் தமிழர்களின் பாரம்பர்ய இசைக் கருவிகளில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று நையாண்டி மேளம். தென்மாவட்டங்களில் கோயில் விசேசங்களுக்கு நையாண்டி மேளம் அதிகமாக இசைக்கப்படு,. இங்கும் அப்படித்தான் ஒரு நையாண்டி மேளம் நடந்து வந்தது. அப்போது அங்குவந்த பொடியன் ஒருவன், அதிலும் வேட்டி, சட்டையில் வந்தவன், தன் வேட்டியை தொடைக்கு மேல் தூக்கி விட்டுக்கொண்டு செம ஸ்டைலாகவும், கிளாசிக்காகவும் நடனம் ஆடத் தொடங்கினான். இதை அனைவருமே ரசித்து மெய்மறந்து பார்க்கத் துவங்கினர். குறித்த இந்தக் காட்சி இணையத்தில் தீயாகப் பரவிவருகிறது.

You may have missed