உருட்டுவதில் இந்த 5 ராசிக்காரங்களும் செம கில்லாடி… அப்டியே நம்புற மாதிரியே சொல்லுவாங்க…

பொய் சொல்வதும் கூட ஒரு கலைதான். ஏன், என்றால் அனைவராலும் அதை சிறப்பாக சொல்லிவிட முடியாது. சிலர் பேச ஆரம்பித்தாலே ரீல் விடாதீர்கள் என ரொம்ப எளிதாகக் கண்டுபிடித்துவிடுவோம். ஆனால் சிலர் பொய் சொன்னால் அச்சு, அசலாக உண்மை போலவே இருக்கும். அதிலும் இந்த 5 ராசிக்காரர்கள் பொய் சொன்னால் கண்டே பிடிக்கமுடியாது. அது யார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

சிம்மம்…

பொய் சொல்வதில் இவர்கள் கை தேர்ந்தவர்கள். சூழலுக்கு ஏற்ப சிறப்பாக பொய் சொல்வார்கள். ஆனால் இவர்கள் பொய் தான் சொல்கிறார்கள் என அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

மீனம்

எப்போதும் தன்னை நல்லவர்களாகக் காட்டிக்கொள்ள முயலும் இவர்கள் சுயநலவாதிகள். தங்கள் சுயநலத்துக்காக அவ்வப்போது பொய் சொல்வார்கள். அதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

மிதுனம்

இவர்கள் கணிவும், பாசமும் நிறைந்தவர்கள். கூடவே பொய் சொல்வதிலும் வல்லவர்கள். இவர்கள் தேவைப்படும் இடங்களில் கொஞ்சம் கட்டுக்கதையையும் சேர்த்துவிடுவார்கள். ஆனால் அதை யாரும் பொய்யென கண்டுபிடிக்கவே முடியாது.

கடகம்

வேகமாக செயல்படும் ஆற்றல் கொண்ட இவர்கள், தங்களுக்கு நெருக்கடி வரும் சமயத்தில் பொய் சொல்லவும் தயங்கமாட்டார்கள். என்னதான் பொய் சொன்னாலும், இவர்களை நம்பியிருப்போரை ஏமாற்ற மாட்டார்கள்.

விருச்சிகம்

இவர்கள் பொய் சொல்வதில் செம கில்லாடிகள். தங்களுக்கு ஒரு வேலை ஆகவேண்டுமென்றால் பொய் சொல்லவும் தயங்க மாட்டார்கள். புது ஆர்டர் பெருவது, தொழில் மேம்படுவது ஆகிய நோக்கத்திற்காக வண்டி, வண்டியாக அவிழ்த்து விடுவார்கள்.

You may have missed