ஓடி விளையாடிய குழந்தைக்கு நொடியில் காத்திருந்த ஆபத்து… மயிரிழையில் எப்படி தப்பினார் பாருங்கள்..!

கரணம் தப்பினால் மரணம் எனச் சொல்வார்கள். வயிற்றுக்காக கயிறு மேல் நடப்பவர்கள் தொடங்கி, நொடிப்பொழுதில் தங்கள் உயிரை பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்பவர்கள் வரை பலருக்கும் இது பொருந்தும். அப்படியான ஒரு சம்பவம் ஒரு சின்னச்சிறிய குழந்தைக்கு நடந்துள்ளது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

ஒரு பூங்காவில் குழந்தை ஒன்று தன் சகோதிரியுடன் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது தங்கை தன் அக்காவைத் துரத்தி விளையாடிக் கொண்டிருந்தாள். அப்படி தன் அக்காவைத் துரத்திக்கொண்டு ஓடியபோது, பூங்காவின் தோட்டத்தில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு பாம்பு ஒன்று சென்று கொண்டிருந்தது. ஓடிவந்தக் குழந்தை அந்த பாம்பின் மீது மிதித்தது. குழந்தை மிதித்த நொடியில் பாம்பு குழந்தையை கடிக்க தன் வாயைத் திறந்து கொண்டு சீறிவருகிறது.

கடைசியில் பாம்பு என்ன நினைத்ததோ தெரியவில்லை குழந்தையை கடிக்காமல் விருட்டென்று செடிகளுக்குள் புகுந்தது. கரணம் தப்பினால் மரணம் என்பது இதில் ரொம்பவே பொருத்தமாக இருக்கும். இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.

You may have missed