ஆபத்தில் சிக்கி போராடிய குரங்ககை காப்பாற்றிய நாய்.. காண்போரை நெகிழ செய்த காட்சி..!

ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன் எனச் சொல்வார்கள். இன்று சக மனிதனும், சொந்த,பந்தங்களும் கூட இந்தத் தன்மையில் இருந்து நகர்ந்து வந்துவிட்டனர். இப்படியான சூழலுக்கு மத்தியில் ஆபத்தில் சிக்கிய குரங்கு ஒன்றை ஒரு நாய் மீட்டு காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாக குரங்கு, நாய் போன்ற உயிரினங்கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களுக்குள் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணனின் படங்களில் தான் பார்த்திருப்போம். ஆனால் இப்போது உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. குரங்கு ஒன்று மரத்தில் மையத்தில் இருந்த ஓட்டைக்குள் தலையை விட்டது. அப்போது அதனால் வெளியே வரமுடியாதபடி அதன் உடல் மாட்டிக் கொண்டது. அப்போது அந்த வழியாக நாய் ஒன்று வந்தது.

குரங்கு மர இடுக்கில் இருந்து வெளியே வர முடியாமல் தவிப்பதைப் பார்த்த அந்த நாய் உடனே மரத்தில் சிக்கி இருந்த குரங்கை தன் வாயால் கடித்து அழுத்தம் கொடுத்து மீட்டது. நாய் கொடுத்த அழுத்தத்தில் குரங்கு அழகாக தப்பித்தது. இந்த வீடியோ மிருகங்களின் மனிதாபிமானத்தை உணர்த்துவதாக பலரும் ஷேர் செய்துவருகின்றனர்.

You may have missed