நேபாள மாணவிக்கு குவியும் பாராட்டு : ஏன் தெரியுமா..? உலகிலேயே அழகான கையெழுத்து இவருடையது தான்..!

என்ன தான் நாம் படிப்பில் செம கெட்டியாக இருந்தாலும் கையெழுத்து நன்றாக இருந்தால் திருத்தும் ஆசிரியரே மார்க்கை அல்வா துண்டு போல் தூக்கி வீசுவார். இல்லையென்றால் நகைக்கடையில் தராசு வைத்து அளப்பவர் போல் ஸ்ரிட் ஆபீசராக மாறிவிடுவார். இதை நாம் அனைவருமே உணர்ந்திருப்போம்.

பொதுவாக கையெழுத்து நன்றாக இருப்பதே செம அழகான விசயம் தான். இந்நிலையில் உலகிலேயே மிக அழகான கையெழுத்து யாருடையது என்னும் சந்தேகமும் நமக்கு இருக்கும் தானே? ஆம் நேபாள நாட்டைச் சேர்ந்த ஒரு மாணவி தான் இந்த பெருமைக்கு சொந்தக்காரர். இதை நேபாள ஊடகங்கள் பெருமைததும்ப சொல்லியிருக்கின்றன.

அச்சுக்கோர்த்து பதித்தால் எப்படி எழுத்துரு இருக்குமோ, அதையே அசால்டாக ஓவர் டேக் செய்கிறது சிறுமியின் எழுத்து. ப்ரக்கர்ரி மல்லா என்ற தரம் ஏட்டில் கல்வி கற்கும் இந்த சிறுமியின் எழுத்தில் அவரது பாடக்குறிப்புகள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்நாட்டு அரசும் இவரது அழகெழுத்துக்கு சான்று வழங்கி அசத்தியுள்ளது. சிறுமியின் எழுத்தை ஜூம் செய்து பாருங்கள்…உங்கள் கண்களையும் கவரும்.

You may have missed