பேச்சு, மூச்சின்றி பிறந்த குழந்தை… தன் மூச்சை கொடுத்து இந்த டாக்டர் செய்ததை பாருங்க…!

குழந்தை பிறந்த உடன் அழ வேண்டும். அப்படி பிறந்ததும் அழுகும் குழந்தைதான் ஆரோக்கியமான குழந்தை. இங்கே ஒரு குழந்தை பேச்சு, மூச்சு இல்லாமல் பிறந்தது. அதை மருத்துவர் காப்பாற்றிய காட்சி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. அப்படி, அவர் என்ன செய்தார் எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

சி.பி.ஆர் சிகிட்சை பற்றி நம்மவர்களுக்கு நன்கு அறிமுகம் உண்டு. அதற்குக் காரணம் தளபதி விஜய். ஆம், விமானநிலையத்தில் வேட்டி, சட்டையோடு இருப்பார் விஜய். திடீர் என கீழ்தளத்தில் ஒரு பெண் மயங்கி சரிவார். அவரது இதயம் செயல்பாட்டை நிறுத்திக்கொள்ளும். உடனே எகிறிகுதித்து ஓடிப்போய் விஜய் சி.பி.ஆர் சிகிட்சை செய்து அந்தப்பெண்ணைக் காப்பாற்றுவார். இப்படியொரு காட்சி விஜயின் மெர்சல் படத்தில் இருக்கும்.

இங்கேயும் அப்படித்தான் ஒரு பிறந்த குழந்தை பேச்சு, மூச்சு இன்றி இருந்தது. உடனே மருத்துவம் செய்த லேடி டாக்டர் மிகவும் சாமர்த்தியமாகச் செயல்பட்டார். உடனே அந்தக் குழந்தையின் வாயோடு, வாய் வைத்து அந்தக் குழந்தைக்கு மூச்சு கொடுத்தார். தொடர்ந்து, அந்தக் குழந்தையின் முதுகில் தட்டிக்கொடுத்து அந்த குழந்தைக்கு சி.பி.ஆர் சிகிச்சை கொடுத்து மீட்டார். ஒருகட்டத்தில் பிறந்த அந்த குட்டி மொட்டு, டாக்டரைப் பார்த்து புன்னகைக்கிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.

You may have missed