நெஞ்சு வலி வந்தது போல் நடித்த எஜமான்… பாசத்தில் துடி,துடித்து நாய் செய்த செயலை பாருங்க..!

செல்லப்பிராணிகளில் அதிகம்பேர் விருப்பப்பட்டு வளர்ப்பது நாய்கள் தான். காரணம் இயல்பாகவே அவைகளிடம் இருக்கும் பாச உணர்வுதான் அதற்குக் காரணம் பல நேரங்களில் தங்கள் எஜமானர்களுக்காக உயிரைக் கூட விடும் அளவுக்கு அவை விசுவாசமானவை. அதை அப்படியே மெய்ப்பிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

தன் வீட்டில் ஒருவர் இறந்துபோனால் உடனே பதறித் துடிப்பது மனிதர்களுக்கே உரிய குணம். அய்யோ, நல்ல மனுஷன் இப்படி போய் சேர்ந்துட்டாரே என அக்கம், பக்கத்திலும் சொல்வார்கள். அதற்கு இணையாக தன் ஓனரின் மீது ஒரு நாய் பாசம் வைத்திருந்தது அதிரவைத்துள்ளது. ஆம். ஆனால் அவர் உண்மையில் சாகவில்லை. திடீரென நாம் இறந்துவிட்டால் நாம் வளர்க்கும் இந்த நாயின் ரியாக்சன் எப்படி இருக்கும்? என அவருக்கு திடீரென தோன்றியது. அதன்பின்னர் நாய் செய்தது செம வைரலாகிவருகிறது.

ஒருவர் தன் வீட்டில் செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அவர் திடீரென ஒருநாள் தனது வீடியோ கேமராவை செட் செய்து வைத்துவிட்டு, நாய் முன்பாக தன் மார்பை பிடித்து விட்டு நெஞ்சு வலியில் விழுந்ததைப் போல் நடித்தார். பேச்சு, மூச்சற்று மூர்ச்சையாகிக் கிடந்தார்.

அவர் எழுந்திருக்காமல் அப்படியே கிடக்கவே நாய் துடிதுடித்து அவரையே சுற்றி, சுற்றி வந்தது.அவரது முகத்தை முகர்ந்து பார்ப்பதுபோல் மூச்சு இருக்கிறதா என சோகத்தோடு வருடியது. மாரடைப்பு வந்து எஜமானார் விழுந்ததும் நாயும் பதறித்துடிப்பதை நம்மால் பார்க்க முடிந்தது. அந்த நாய், அவரை பதற்றம் தனியாமல் சுற்றிவரவே கடைசியில் அவர் துள்ளி எழுந்து சிரித்தபடியே நாயை கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தினார்.

குறித்த வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது. நீங்களே பாருங்களேன். பாசத்தில் உருகிப்போவீங்க…

You may have missed