இந்த அன்பிற்கு முன்னாடி பணம் ஒரு விசயமே இல்லை.. சாலையோரம் தான் வாழ்க்கை.. ஆனாலும் இவர்களின் சந்தோஷத்துக்கு ஈடு இணை இல்லை..!

பாசத்துக்கு முன்பாக பணம் ஒரு விசயமே இல்லை. இந்த உலகில் விலை மதிக்க முடியாதது பாசம் மட்டும்தான். அதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பணம் என்பது வெறும் காகிதம் தான். என்ன அந்த காகிதத்தைக் கொடுத்து எதை வேண்டுமானாலும் வாங்கமுடியும். ஆனால் அன்பை பணத்தைக் கொடுத்து வாங்கவே முடியாது. அதனால்தான் உலகிலேயே உயர்வானதாக அன்பு உருவகப்படுத்தப்படுகிறது. வசதி வாய்ப்பு பார்த்து தந்தை, மகன் பாசம் வருவதில்லை. அது உணர்வால் கட்டி எழுப்பப்படும் அற்புதம். இதோ இங்கேயும் ஒரு மாற்றுத்திறனாளி தந்தை இருக்கிறார். அவர் தன் செல்ல மகனோடு சாலையில் தான் வசிக்கிறார்.

ஆனால் மாறாத பாசத்தோடு இருவரும் அன்பைப் பரிமாறிக் கொள்கின்றனர். அதிலும் அந்த பிஞ்சுக்குழந்தை மகன் தன் மழலைக் கரங்களில் சோறு எடுத்து நீட்ட, அவனது அப்பா சாப்பிடுகிறார். எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத இன்பம் இது. இதோ நீங்களே வீடியோவைப் பாருங்கள்.

You may have missed