நொடிப்பொழுதில் ஆற்றில் கவிழ்ந்த பிரமாண்ட வீடு… இயற்கையை மிஞ்சி எதுவுமே இல்லை… என்ன காரணம் தெரியுமா?

பிரமாண்டமான ஆடம்பர இல்லம் ஒன்று நொடிப்பொழுதில் பட, படவென இடிந்து விழும் காட்சி ஒன்று இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. அதன் காரணம் என்ன எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்

பொதுவாக ஆற்றங்கரையோரங்களில் பலரும் வீடு கட்டிக் கொள்கிறார்கள். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. முன்பெல்லாம் எப்போது ஆற்றில் அதிகளவில் தண்ணீர் வரும்? எப்போது இயல்பாக இருக்கும் என கணிக்க முடியும். ஆனால் இன்று சூழல் அப்படி இல்லை. பருவ நிலைகள் தாறுமாறாக மாறிக் கிடக்கிறது. எப்போது, எந்தவகையில் ஆபத்துவரும் என்பது யாராலும் கணிக்க முடியாத விசயமாக இருக்கிறது. மழை சில நேரங்களில் பெய்யாமல் வாட்டுகிறது. சில நேரங்கள் பேய் என பெருமழை பெய்து வாட்டுகிறது.

அப்படியான தருணங்களில் ஆற்றை ஒட்டிக் கட்டியிருக்கும் குடியிருப்புகளையும் அவை விட்டு வைப்பது இல்லை. அந்தவகையில் இங்கேயும் இந்தியாவில் பிர்நகரில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதில் கொஞ்சம், கொஞ்சமாக ஆற்று வெள்ளம் கரையை அரிக்கத் தொடங்கியது. ஒருகட்டத்தில் கண் இமைக்கும் நொடியில் அந்தப் பகுதியில் கட்டப்பட்டிருந்த வீடுகளும் இடிந்து விழுந்தது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.

You may have missed