வேடிக்கை பார்க்க வந்து செம ஆட்டம் போட்ட பெண்.. செண்டை மேளத்துக்கு என்ன ஒரு ஆட்டம் பாருங்க…

முன்பெல்லாம் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். பெண்கள் விளையாட்டுத்துறையிலும் இப்போது வேற லெவலில் அசத்துகின்றனர்.

அதிலும் அதெலெட்டிக் போன்ற போட்டிகள் தொடங்கி, கிரிக்கெட் வரை சர்வசாதாரணமாக விளையாடி அனைவரையும் ரசிக்க வைக்கின்றனர். ஆணுக்குப் பெண் இளைப்பிள்ளை என பாரதி பாடிய பாடலுக்கு ஏற்ப இப்போது ஆண்களைப் போலவே பெண்களும் விளையாட்டிலும் வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.அதேபோல் இன்று பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதித்து அசத்துகின்றனர்.

கனரக வாகனங்களைக் கூட மிக அழகாக ஓட்டி பெண்கள் அசத்துகின்றனர். விமானம் ஓட்டுவது முதல் இன்று பெண்கள் சகல துறைகளிலும் கோலோச்சுகின்றனர். அந்தவரிசையில் இப்போது அழகிய இளம்பெண் ஒருவர் ஊர் திருவிழாவில் மிகவும் ரசனையோடு நடனம் ஆடி அசத்துகிறார். பொதுவாகவே கேரளத்தின் செண்டை மேளத்துக்கு பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. செண்டை மேளம் ஊர்கோவில் திருவிழாக்களில் நடத்தப்படும் போது அனைவருமே சொக்கிப் போவது உண்டு.

அந்த வரிசையில் இங்கேயும் சேலை கட்டிய அழகிய தமிழ்ப்பெண் ஒருவர், செண்டை மேளத்துக்கு மயங்கி சொக்கிப் போனார். அவர் பொட்து இடத்தில் சிறிதும் தயக்கமின்றி செண்டை மேளத்துக்கு ஆடி பட்டையைக் கிளப்பினார். ஒருகட்டத்தில் ஆர்வமிகுதியில் அந்த பெண் செண்டை மேளத்தின் கம்புகளை வாங்கி அடித்தும் அசத்தினார். இதோ நீங்களே அதைப் பாருங்களேன்…

You may have missed