பலருக்கு வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு ஈஸியில்லை.. பத்தே நொடியில் சொல்லி கொடுக்கும் ஒரு பாடம்..

வாழ்வில் அனைத்துமே நாம் நினைத்ததுபோல் நடந்துவிடாது. அப்படி இருந்துவிட்டால் வாழ்க்கையிலும் சுவாரஸ்யமே இருக்காது அல்லவா? ஆனால் அனைவருக்குமே இங்கு வாழ்கை சராசரியாகவோ, சரி சமமாகவோ இருப்பது இல்லை.

சிலருக்கு பணம் ஒரு பொருட்டாகவே இருக்காது. அவர்களிடம் கை நிறைய பணம் இருக்கும். ஆனால் விரும்பியதை வாங்கிச் சாப்பிடும் உடல் நிலை இருக்காது. அய்யோ ஸ்வீட் தொடாதீங்க. சர்க்கரை பாடர் லைன் தாண்டி மிரட்டுது என்பார்கள். என்னை டாக்டர் உப்பே தொடக் கூடாது எனச் சொல்லிவிட்டார்கள் எனச் சொல்பவர்களையும் கடக்கிறோம். ஆனால் நன்கு சாப்பிட வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஆரோகியம் இருந்தாலும் அதை வாங்கிச் சாப்பிடும் அளவுக்கு பணம் கிடைப்பதில்லை. இதுதான் உலகமாக இருக்கிறது.

இதோ இங்கேயும் அப்படித்தான். பேருந்து நிலையத்தில் தண்ணீர் பாட்டில் விற்கிறாரொரு இளைஞர். பேருந்து புறப்பட்டுவிட்டது. அவர் அதிகமான தண்ணீர் பாட்டில்களை கையில் தூக்கிப் பிடித்துக்கொண்டு ஓடியே வருகிறார். பஸ்ஸில் இருக்கும் ஒருவருக்கு தண்ணீர் பாட்டிலைக் கொடுத்துவிட்டு காசு வாங்கிச் செல்கிறார். வெறும் பதினான்கு நொடிதான். ஆனால் ஒருவர் வாழ…தன் குடும்பத்தை வாழவைக்க என்னவெல்லாம் கஷ்டப்பட வேண்டி இருக்கிறது எனவும், வாழ்க்கை அவ்வளவு ஈஸியில்லை எனபதையும் முகத்தில் அறைந்தது போல் சொல்கிறது இந்தக் காட்சி. இதோ நீங்களே பாருங்களேன்.

You may have missed