கறிக்காக வளர்த்த கோழியை வெட்டப் போன தந்தைக்கு சிறுமி கொடுத்த தண்டனை… பலரையும் உருகவைத்த காட்சி..!

குழந்தைகளின் உலகம் எப்போதுமே அலாதியானது. அன்புதான் குழந்தைகள் மனம் முழுவதும் இருக்கும். அதனால் தான் வக்கிரம், கெட்ட குணம் இல்லாதவர்களை குழந்தை மனம் கொண்டவர்கள் என நாமும் சொல்கிறோம். இங்கே அப்படித்தான் ஒரு குழந்தையின் பெருந்தன்மையும், அன்பும் நம்மை சிலாகிக்க வைத்திருக்கிறது.

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். குறித்த அந்தக் காட்சியில் தன் வீட்டில் வளர்க்கும் கோழியை மதியச் சாப்பாட்டுக்காக கொல்ல முயற்சிக்கிறார் ஒருவர். கோழியின் கழுத்தில் அவர் கத்தியை வைத்ததுமே அவரது மூன்று வயதே ஆன மகள் ஓடிவந்து கோழியை கொல்லவிடாமல் தடுத்து அழுகிறார்.

கூடவே அந்த கோழிக்கு அரிசியையும் தன் அப்பாவிடம் கொடுத்து கொடுக்கச் சொல்கிறார். குழந்தையின் அழுகையைப் பார்த்ததும், அவர் விளையாட்டாக மீண்டும் கோழியை வெட்ட முயல, குழந்தையோ தன் அப்பாவையே கீழே தள்ளிவிடுகிறது.

அன்பை சுமக்கும் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

You may have missed