ஆசிரியரின் மரணத்தில் நடனம் ஆடி இறுதி சடங்குக்கு அனுப்பி வைத்த மாணவர்கள்… உருகவைக்கும் காரணம் தெரியுமா?

‘இந்த தேகம் மறைந்தாலும் இசையால் மலர்வேன்’ என எஸ்.பி.பியின் பாடல் ஒன்று பேமஸ். பாடல் பாடுபவருக்கு மட்டுமல்ல, இசையை ரசிப்போருக்கும் இந்த வரிகள் பொருந்தும். அதிலும் நடனக்கலைஞர்களுக்கு கனக் கச்சிதமாக பொருந்திப் போகும் வரி இது.

அந்த அளவுக்கு நடனக் கலைஞர்களின் நாடி, நரம்பெல்லாம் அந்த உணர்வு மேலோங்கி இருக்கும். அந்தவகையில் மலேசியாவில் ஒரு நடன ஆசிரியர் இருந்தார். அவர் யாரும் எதிர்பார்க்காத நிலையில் திடீரென தன் 32 ஆம் வயதில் மரணம் அடைந்தார். அவரது மரணத்தால் அவரது மாணவர்கள் அதிர்ந்து போனார்கள். அவருக்கு நடனம் ஆடி இறுதி சடங்கு செய்து அவர்கள் வழியனுப்பி வைத்தது நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

அந்த நடன ஆசிரியர் ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவசமாகவும் நடனம் சொல்லிக் கொடுத்துள்ளார். ஆடிக்கொண்டிருக்கும்போதே பின்னால் இருந்து எழும் மாணவர்களின் சப்தம், வேதனை ஆகியவை மனதை உருக வைக்கிறது. இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்களேன்.

You may have missed